உணரப்படாத உண்மைகளுடன் காலத்தை நம்பி கடக்கும் ..என் வாழ்நாளின் நிகழ்வுகளுடன்.நான் கேட்டு.. பார்த்து..ரசித்த விடயங்களையும் என் மனம் உங்களுடன் பேசுகிறது ...!!!!
Tuesday, 27 December 2011
Sunday, 18 December 2011

கனவுகள் கண்ட இரவுகள் போய்..
கவிதை வடிக்கும் இரவை உணர்கிறேன்..
எனக்கு எதுகும் புரியவில்லை..
சிரித்துக்கொண்டே செல்கிறேன்...
செல்லும் பாதை அறியாமல்...
என்று எனது பாதையை... அறிகிறேனோ அன்றுதான்..
அழுவேன்
இழப்புக்களை.. நினைத்து................................... அதுவரை புன்னகை பூத்த.. வாழ்வு என்று நினைத்தபடி.... எங்கோ செல்கிறேன்.....
Saturday, 17 December 2011
படிந்த வரி.......!!!
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்
- கல்யாண்ஜி
மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.
காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.
அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.
ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்
- கல்யாண்ஜி
மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.
காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.
அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.
ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?
Wednesday, 14 December 2011
Tuesday, 11 October 2011

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.
பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.
வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.
அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்
அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.
Sunday, 9 October 2011

நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்....
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்!!!
உனக்கான என் பிரியம்....
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்!!!
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை....
என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம்!!!
உன் பதிலுக்கான என் கேள்விகள் செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்!!!
உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும் நீ இல்லையென்ற வெறுமையை என்ன செய்வதென்று யோசிக்கிறேன்.
தனிமையில்............!!!

வேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை கடவுளிடம் கொடுக்கிறேன்.
கசகசப்பில் அருவருப்படையும்- கடவுள்
இரவின் அடர்த்தியைக் குறைத்து.
சாரல் மழையோடு மெலிதாக காற்று வீசச் செய்கிறார்.
இருந்தும்.......
கோடையின் இரவில் உறங்க முடிவதில்லை
எழுத முடிவதில்லை
நினைக்க முடிவதில்லை.
எதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.
அதுவும்.. எனக்குள்ளே!!
Wednesday, 5 October 2011
உங்கள் விதியை மாற்ற 10 வழிகள்!

1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.
4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.
7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.
9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.
10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
Saturday, 30 July 2011

காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...
சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..
நீள்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..
வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...
நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..
இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..
எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!
நன்றி ... செண்பகம்
Wednesday, 27 July 2011

எத்தனை விஷயங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்எதுவும் செய்ய முடியா
எதிர்க்கும் சக்தியற்ற
ஏகாந்த மனோநிலை...!
அத்தனைக்கும் ஆசைப்படு என்றே
பித்தன் ஒருவன் சொன்னான்
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்
ஏதாவது ஒன்று கிடைக்கும்....?
இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்
இசையாத மனதினை
என்ன சொல்லி
இசையச்செய்ய....?
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...!
நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ
அங்கே தொடரும் பெருங்கவலை...!
ஓர் நாளில் ஓராயிரம் மாற்றங்கள்
அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?
Tuesday, 26 July 2011

யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் -என்
மனது....
பெற்றவர்களும் மற்றவர்களும்..!
இணையாய் வந்தவளும்...!!
துணை என சொன்னவர்களும்...!!!
தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
மௌனமாகிறேன்.
கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்..
இணையாய் வந்தவளும்...!!
துணை என சொன்னவர்களும்...!!!
தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
மௌனமாகிறேன்.
கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்..
தனிமையில்.................

தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!
வலிகளும் வதைகளும்
பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!
அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!
கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!
காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!
அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!
ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!
காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!
அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!
ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!

என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....
என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....
அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......
உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....
எனக்கான பாதையில்
என் நடையை
என் மனம் வழிநடத்தட்டும்!!!
Monday, 25 July 2011

எனக்கு மட்டும்
ஏன் இப்படி
எனக்கேட்டுக்கொள்ள
எல்லாருக்குமே
ஏதோ ஒன்று
நடந்துகொண்டு தான்
இருக்கிறது.......
எல்லைகளில்லாமல்
விரியும் என் வெளி
முடிந்துகொண்டிருக்கிறது
தொடங்குவதற்கு
முன்பாகவே......
சபை நாகரிகத்திற்காய்
உதிர்க்கப்படும்
சிரிப்புகளில்
உதிர்ந்து விழாமல்
ஒளிகின்றன
செயற்கை முத்துக்கள்.....
மிகச்சிக்கலாய்
நீண்டு வளைந்துநெளிந்து
செல்லும் பாதை
நேராகிக்கொண்டிருக்கிறது
கடந்து செல்ல செல்ல......
காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்.....!!!!

வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது
கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன
பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன
வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது
முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்
சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில் உறுத்துகிறது
மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்
இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது
எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்
விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது ....!!!
நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு
இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது
ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்
உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக
ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக
நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை
வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்
அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்
தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்
ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்
நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்
மறுபடி ஒரு பயணத்துக்காய்

மற்றவரை மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!
பசி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!
அணைக்குள் அடைந்திருக்கும்
ஆற்று வெள்ளமென
விழித்திரைக்குள் தடுத்துவிட்ட
என் கண்ணீர்த் துளிகளோடு,
எல்லோரும் ரசிக்கும் ஒரு புன்னகையை
முகத்தில் மாட்டிக்கொண்டு,
மற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!
Wednesday, 20 July 2011

நம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .
சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்
நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.
பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.
வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.
அவை சில வேலை
நிஜங்களாகலாம்.
சில வேலை
பொய்களாகலாம்.
நம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!
Monday, 11 July 2011

இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்
அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது
என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்
சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்
இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை
மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது
மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணீர் சிந்தும் ..........
உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்
உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.
சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.
நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.
இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே!
எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் வழிவகுக்கும்.
Wednesday, 22 June 2011
Wednesday, 8 June 2011
காலத்தின் பெருவெளியில்........

காலத்தின் பெருவெளியில்
கரைந்து போன....
இறந்த காலத்தை.......
நினைத்து பார்க்கிறேன்.....
கொஞ்சம்....
வாழ்க்கை பயணத்தில்...
மாறிப்போன வழிமுறைகளும்
சூழ்நிலைகள் சூறாவளியாகிபோன...
சோகங்களும்.....
சில தருணங்களில்
வாழ்க்கையே மாறிப்போன
கொடுமைகளும்...
இன்னும் நிகழ்ந்துகொண்டேதான்...
இருக்கின்றது....
ஒரு வேலை...
என் இறப்பிற்க்கு,
அப்பால் நிகழக்கூடும்..
நானும்
காலத்தின் பெருவெளியில்
கரைந்து போக....
இறப்பிற்கு இன்னும் சில நாட்கள்......!!!

பயணச் சுவடுகளைத் திருப்பினேன்
எடுபடவில்லை, தூரத்தில்
கருங்குயிலின் கீதம் !
வரவேண்டியவர்கள் எல்லாம்
வந்தார்கள்
வந்தவர்கள் எல்லாம்
போனார்கள்
இங்கே
ஆறுதல் சொல்ல
யாருண்டு எனக்கு..
பத்து மாதம்
படுத்திருந்தக் கருவறை
எப்படி இருந்ததென்பதை அறியாதவனுக்கு
இறந்த பின்
கூடும் அறை
எப்படி இருந்தால் என்ன..?
தொப்புள் கொடியில்
தொடர்ந்த கண்ணீர் துளியின் ஈரம்
உயிர்க்கொடி உடையும் போதும்
அப்படியேக் காயாமல்!
என் இறப்பின்
நாட்கள் எண்ணப்படுவதால்
இன்று முதல் தூக்கத்திற்குத்
துக்கதினம் அனுசரிக்கப் படுகின்றன
விழிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன
ஆனால்
அழும் என் கண்களுக்கு மட்டும்
அணைக்கட்டுப் போட முடியவில்லை.
என்
இருவிழிகள் இரைக்கும் கண்ணீரை
எடைப்போட்டு பாருங்கள்
கடலின் அடர்த்தியை விடக்
கனமானதாக இருக்கும்!
இப்போதெல்லாம்
என் மூச்சிக்காற்றோடு
நாசித்துளை வழியாக
நரம்போடுகூட உறவாடி விட்டு தான்
வெளியே வருகிறது
ஏக்கமும்.. பயமும்...
பார்க்கும் திசையை
வெகுநேரம் வெறித்தப் பார்வைப்
பார்வைக்கின்றன கண்கள்.
உதிர்ந்த மலர்கள்
என் மீது விழும்போதெல்லாம்
சந்தோசப்பட்ட என் மனது
இப்போது
கண்ணீர் விடுகிறது
மலர்ந்த மலர்களுக்காக...!
வாழ்க்கைப் படம்
திரையிடப்பட்டு ஒளிப்பதிவு
செய்யப்படுகிறது
எங்கு
திரையிடப்படுமோ?
பூமி மிதித்தோடும்
பூதவுடல் இறுதியில்
பூமியால் மிதிக்கப்படுவதே
இயற்கையின் நியதி..!
.தாகம்...தண்ணீரால்
தீர்க்க முடியாதத் தாகம்
தாய்பாலின்
கடைசித் துளித் தீரப்போகிறது!
நண்பர்கள் கூட்டம்
நாளை வரும்
நால்வரின் கைகளால்
கடைசி நாள் பயணம்!
என்னோடு என் கனவுகளையும்
எரித்துவிடுங்கள் இல்லையேன்றால் கதறியழும்
என் கனவுகளை காப்பாற்றுவததற்கு யாருமில்லை!
இன்று வரை மண்ணில் விளைந்ததை
நான் உண்டேன் நாளை விழைந்த மண் என்னை உட்கொள்ளும்!
தண்ணீரில் மலர்ந்த மலர்கள்
கண்ணீரில் நனைந்தபடி
என் இறுதி ஊர்வலத்தில்..!
நாளை இந்த சூரியன் வரும் நேரம்
நான் இந்த பூமியிலேப் புதைக்கப்பட்டிருப்பேன்
இதோ நால்வர்
என்னை புதைத்து விட்டு போனார்கள்
இந்தக் கருமத்திற்க்காகவா இத்தனை போராட்டங்கள்
இந்த உலகினில்!
எடுபடவில்லை, தூரத்தில்
கருங்குயிலின் கீதம் !
வரவேண்டியவர்கள் எல்லாம்
வந்தார்கள்
வந்தவர்கள் எல்லாம்
போனார்கள்
இங்கே
ஆறுதல் சொல்ல
யாருண்டு எனக்கு..
பத்து மாதம்
படுத்திருந்தக் கருவறை
எப்படி இருந்ததென்பதை அறியாதவனுக்கு
இறந்த பின்
கூடும் அறை
எப்படி இருந்தால் என்ன..?
தொப்புள் கொடியில்
தொடர்ந்த கண்ணீர் துளியின் ஈரம்
உயிர்க்கொடி உடையும் போதும்
அப்படியேக் காயாமல்!
என் இறப்பின்
நாட்கள் எண்ணப்படுவதால்
இன்று முதல் தூக்கத்திற்குத்
துக்கதினம் அனுசரிக்கப் படுகின்றன
விழிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன
ஆனால்
அழும் என் கண்களுக்கு மட்டும்
அணைக்கட்டுப் போட முடியவில்லை.
என்
இருவிழிகள் இரைக்கும் கண்ணீரை
எடைப்போட்டு பாருங்கள்
கடலின் அடர்த்தியை விடக்
கனமானதாக இருக்கும்!
இப்போதெல்லாம்
என் மூச்சிக்காற்றோடு
நாசித்துளை வழியாக
நரம்போடுகூட உறவாடி விட்டு தான்
வெளியே வருகிறது
ஏக்கமும்.. பயமும்...
பார்க்கும் திசையை
வெகுநேரம் வெறித்தப் பார்வைப்
பார்வைக்கின்றன கண்கள்.
உதிர்ந்த மலர்கள்
என் மீது விழும்போதெல்லாம்
சந்தோசப்பட்ட என் மனது
இப்போது
கண்ணீர் விடுகிறது
மலர்ந்த மலர்களுக்காக...!
வாழ்க்கைப் படம்
திரையிடப்பட்டு ஒளிப்பதிவு
செய்யப்படுகிறது
எங்கு
திரையிடப்படுமோ?
பூமி மிதித்தோடும்
பூதவுடல் இறுதியில்
பூமியால் மிதிக்கப்படுவதே
இயற்கையின் நியதி..!
.தாகம்...தண்ணீரால்
தீர்க்க முடியாதத் தாகம்
தாய்பாலின்
கடைசித் துளித் தீரப்போகிறது!
நண்பர்கள் கூட்டம்
நாளை வரும்
நால்வரின் கைகளால்
கடைசி நாள் பயணம்!
என்னோடு என் கனவுகளையும்
எரித்துவிடுங்கள் இல்லையேன்றால் கதறியழும்
என் கனவுகளை காப்பாற்றுவததற்கு யாருமில்லை!
இன்று வரை மண்ணில் விளைந்ததை
நான் உண்டேன் நாளை விழைந்த மண் என்னை உட்கொள்ளும்!
தண்ணீரில் மலர்ந்த மலர்கள்
கண்ணீரில் நனைந்தபடி
என் இறுதி ஊர்வலத்தில்..!
நாளை இந்த சூரியன் வரும் நேரம்
நான் இந்த பூமியிலேப் புதைக்கப்பட்டிருப்பேன்
இதோ நால்வர்
என்னை புதைத்து விட்டு போனார்கள்
இந்தக் கருமத்திற்க்காகவா இத்தனை போராட்டங்கள்
இந்த உலகினில்!

உருண்டு கொண்டிருக்கும் உலகில்...
நடந்து கொண்டிருக்கும் நாட்களில்...
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடை நான்...!
தூரத்தில் இருக்கும் இலக்கு கைதட்டி அழைக்க... ஓடிக்கொண்டிருக்கிறேன் கால் வலிக்க...! இளைப்பாற இருக்கிறது கவிதையின் மடி....! ஓடுகின்ற பாதை எதுவானால் என்ன பதிக்கின்ற தடம் என் பெயரை உரக்க உச்சரிக்கும் ஒருமுறையேனும் ...! அந்த நம்பிக்கையில்... காத்திருக்கும் நிமிடங்களை கருத்தில்கொண்டு தொலைந்துபோன என் தூக்கங்களையெல்லாம்
தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்...!
தீர்க்க முடியாத பிரச்னைகள் விரைவில் தீர - ஒரு ஆன்மீக ஆலோசனை

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
-பகவத்கீதை
Subscribe to:
Posts (Atom)





















