Monday, 11 July 2011


இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணீர் சிந்தும் .........
.

No comments:

Post a Comment