Tuesday, 26 July 2011


யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் -என்
மனது....

பெற்றவர்களும் மற்றவர்களும்..!
இணையாய் வந்தவளும்...!!
துணை என சொன்னவர்களும்...!!!

தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
மௌனமாகிறேன்.

கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்..
தனிமையில்.................

No comments:

Post a Comment