Saturday, 14 April 2012


மனிதனை மனிதநேயத்தோடு மனிதனாக மதித்து நடந்தால் நம் வாழ்வே சொர்க்கமாகும்.
'முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவியாய் இருப்போம்
முடியாவிடில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமலாவது இருப்போம்.;

அனுபவங்களில் ஒன்று..!


ஆரம்ப நாட்கள் கொடுத்தது
அறிமுகம் இல்லாத பல
முகம்களையும் மட்டுமல்ல
அச்சத்தையும் சேர்த்து தான்!

இன்னும் பல வருடங்கள்
முதுகிலே சுமையும்
மூளையில் அறிவையும்..,
நினைக்கும் போதே
நெஞ்சை கனத்த சோகம்..!

இயற்கையின் நியதியை மீறி
அந்த நாட்களின் இரவுகள்
விடியாத பொழுதுகளாகவே
இருந்துவிடக்கூடாதா? என்று
இறைவனை வேண்டிக்கொள்ளும் வயசு..!

மாலைப் பொழுதுகளில் கிடைக்கும்
சிறு சிறு சந்தோசங்களை எல்லாம்
களைந்து போய்விடும்
காலை நேரக் கணப்பொழுதுகளில்,
அம்மாவின் அதட்டல்களிலும்
அயலவர்கள், கிண்டல்களிலும்,
பிடிவாதங்கள் அத்தனையும்
பிடிமானம் அற்றதாகிவிடும்!

'சிறகு முளைத்துப்
பறக்க நினைக்கையிலே
சிறைக்கு அனுப்புவதா?...
சலித்துக்கொள்ளும் மனசு!!

பால்ய வயசினிலே,
பள்ளி செல்ல தொடங்கும் நாட்களின் ..
பலரது அனுபவங்கள்
இவை தானே!!