Tuesday, 27 December 2011

Sunday, 18 December 2011

"எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாகும் "!உலகத்தில்
என் எண்ணங்களை
நான் அழகு படுத்துகிறேன்!
என் வாழ்வை
உன் அருளால்
நீ அழகு படுத்து
இறைவா!

ச‌ல‌ன‌ம‌ற்ற
‌மனம் வேண்டி,
தவறுகளை
தவிர்த்துவிட்டு
அமைதியில் ஆழ்ந்தாலும்!

கோப‌மோ,
வெறுப்போ,
பொறாமையோ,
ஏதேனும் ஒன்றை
ஏற்ப‌டுத்திவிட்டே செல்கின்ற‌ன
‌அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ள்!

உங்களின் மிகச்சிறந்த நண்பனாக கடவுளைபோல் யாரும் இருக்கமுடியாது, கடவுளிடம் நீங்கள் என்ன பேசினாலும் அவர் உங்களை தவறாக நினைப்பதில்லை, உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து கூறி விவாதம் செய்வதில்லை, நீங்கள் சொல்வதை அவர் வேறுயாரிடமும் சொல்வதில்லை.

கனவுகள் கண்ட இரவுகள் போய்..
கவிதை வடிக்கும் இரவை உணர்கிறேன்..

பலநாள் கனவுகள் ஒருநாளில் அழியுது.. ஒருநாள் நிகழ்வு... பலநாள் நினைவாகுது... இதுதான் வாழ்கையா..
எனக்கு எதுகும் புரியவில்லை..

சிரித்துக்கொண்டே செல்கிறேன்...
செல்லும் பாதை அறியாமல்...
என்று எனது பாதையை... அறிகிறேனோ அன்றுதான்..
அழுவேன்
இழப்புக்களை.. நினைத்து................................... அதுவரை புன்னகை பூத்த.. வாழ்வு என்று நினைத்தபடி.... எங்கோ செல்கிறேன்.....

Saturday, 17 December 2011


என்னையே நான் அறிகிறேன்

என் இனியத் தனிமையில் .

படிந்த வரி.......!!!

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்

- கல்யாண்ஜி


மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.

காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.

அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.

ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?

வீழ்வதென்றாலும் மகிழ்ச்சியாய் ஏற்கிறது காற்றில் அசைந்தாடும் இறகு...

மரணத்தை கண்டு அஞ்சும் என்னை உதிரும் இலையின் மெளனம் கேலி பேசுகிறது.

எல்லாவற்றையும் சேர்த்து என்னுடையது என்றேன் நான், என்னையும் சேர்த்து தன்னுடையது என்றது மரணம்.

கலைந்து கிடப்பதே வாழ்க்கை நேர்க்கோட்டில் நிற்பது மரணம்.

மெளனமே எனது கவிதையின்
கடைசி வார்த்தை...

வழியில் கிடக்கும் முள்ளை தள்ளிவிடும் அளவிற்கு பக்குவம் இல்லையென்றாலும் தாண்டிச் செல்லும் திறமையுள்ளவன் நான்.

நினைத்தது
எல்லாம்
நடந்துவிடாது
என்கிற
யதார்த்தத்துக்கும்
நினைத்தது
எல்லாம்
நடக்க வேண்டும்
என்கிற
எதிர்ப்பார்புக்கும்
இடையில்
சிக்கித்
தவிக்கும்
மனித வாழ்க்கை

Thursday, 15 December 2011


உடைந்த புல்லாங்குழல்
கசியும் சுரமற்ற
இசையாய்
சுவையற்று கழிகிறது
என் வாழ்க்கை!

Wednesday, 14 December 2011


இனிச் செல்ல
எங்குமில்லை என்கையில்தான் புரிகிறது சேருமிடம் தொலைத்த இழப்பு.

நாம் அநேகமாய் நினைக்க வேண்டியதை மறக்கவும்
மறக்கவேண்டியதை நினைக்கவும் செய்கிறோம்.
மறக்க வேண்டியவற்றை மறந்தும்
மறக்கக் கூடாததை நினைத்தும் வாழ்ந்து காட்டுவோம்!!!

Sunday, 4 December 2011


கனவு என்பது ஒரு சிறிய வாழ்க்கை!
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கனவு!