Monday, 25 July 2011


எனக்கு மட்டும்
ஏன் இப்படி
எனக்கேட்டுக்கொள்ள
எல்லாருக்குமே
ஏதோ ஒன்று
நடந்துகொண்டு தான்
இருக்கிறது.......

‍‍எல்லைகளில்லாமல்
விரியும் என் வெளி
முடிந்துகொண்டிருக்கிறது
தொடங்குவதற்கு
முன்பாகவே......

சபை நாகரிகத்திற்காய்
உதிர்க்கப்படும்
சிரிப்புகளில்
உதிர்ந்து விழாமல்
ஒளிகின்றன
செயற்கை முத்துக்கள்.....

மிக‌ச்சிக்க‌லாய்
நீண்டு வளைந்துநெளிந்து
செல்லும் பாதை
நேராகிக்கொண்டிருக்கிறது
கடந்து செல்ல‌ செல்ல......

காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்.....!!!!

No comments:

Post a Comment