
என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....
என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....
அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......
உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....
எனக்கான பாதையில்
என் நடையை
என் மனம் வழிநடத்தட்டும்!!!
No comments:
Post a Comment