
எத்தனை விஷயங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்எதுவும் செய்ய முடியா
எதிர்க்கும் சக்தியற்ற
ஏகாந்த மனோநிலை...!
அத்தனைக்கும் ஆசைப்படு என்றே
பித்தன் ஒருவன் சொன்னான்
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்
ஏதாவது ஒன்று கிடைக்கும்....?
இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்
இசையாத மனதினை
என்ன சொல்லி
இசையச்செய்ய....?
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...!
நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ
அங்கே தொடரும் பெருங்கவலை...!
ஓர் நாளில் ஓராயிரம் மாற்றங்கள்
அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?
No comments:
Post a Comment