
உருண்டு கொண்டிருக்கும் உலகில்...
நடந்து கொண்டிருக்கும் நாட்களில்...
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடை நான்...!
தூரத்தில் இருக்கும் இலக்கு கைதட்டி அழைக்க... ஓடிக்கொண்டிருக்கிறேன் கால் வலிக்க...! இளைப்பாற இருக்கிறது கவிதையின் மடி....! ஓடுகின்ற பாதை எதுவானால் என்ன பதிக்கின்ற தடம் என் பெயரை உரக்க உச்சரிக்கும் ஒருமுறையேனும் ...! அந்த நம்பிக்கையில்... காத்திருக்கும் நிமிடங்களை கருத்தில்கொண்டு தொலைந்துபோன என் தூக்கங்களையெல்லாம்
தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்...!
No comments:
Post a Comment