
பயணச் சுவடுகளைத் திருப்பினேன்
எடுபடவில்லை, தூரத்தில்
கருங்குயிலின் கீதம் !
வரவேண்டியவர்கள் எல்லாம்
வந்தார்கள்
வந்தவர்கள் எல்லாம்
போனார்கள்
இங்கே
ஆறுதல் சொல்ல
யாருண்டு எனக்கு..
பத்து மாதம்
படுத்திருந்தக் கருவறை
எப்படி இருந்ததென்பதை அறியாதவனுக்கு
இறந்த பின்
கூடும் அறை
எப்படி இருந்தால் என்ன..?
தொப்புள் கொடியில்
தொடர்ந்த கண்ணீர் துளியின் ஈரம்
உயிர்க்கொடி உடையும் போதும்
அப்படியேக் காயாமல்!
என் இறப்பின்
நாட்கள் எண்ணப்படுவதால்
இன்று முதல் தூக்கத்திற்குத்
துக்கதினம் அனுசரிக்கப் படுகின்றன
விழிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன
ஆனால்
அழும் என் கண்களுக்கு மட்டும்
அணைக்கட்டுப் போட முடியவில்லை.
என்
இருவிழிகள் இரைக்கும் கண்ணீரை
எடைப்போட்டு பாருங்கள்
கடலின் அடர்த்தியை விடக்
கனமானதாக இருக்கும்!
இப்போதெல்லாம்
என் மூச்சிக்காற்றோடு
நாசித்துளை வழியாக
நரம்போடுகூட உறவாடி விட்டு தான்
வெளியே வருகிறது
ஏக்கமும்.. பயமும்...
பார்க்கும் திசையை
வெகுநேரம் வெறித்தப் பார்வைப்
பார்வைக்கின்றன கண்கள்.
உதிர்ந்த மலர்கள்
என் மீது விழும்போதெல்லாம்
சந்தோசப்பட்ட என் மனது
இப்போது
கண்ணீர் விடுகிறது
மலர்ந்த மலர்களுக்காக...!
வாழ்க்கைப் படம்
திரையிடப்பட்டு ஒளிப்பதிவு
செய்யப்படுகிறது
எங்கு
திரையிடப்படுமோ?
பூமி மிதித்தோடும்
பூதவுடல் இறுதியில்
பூமியால் மிதிக்கப்படுவதே
இயற்கையின் நியதி..!
.தாகம்...தண்ணீரால்
தீர்க்க முடியாதத் தாகம்
தாய்பாலின்
கடைசித் துளித் தீரப்போகிறது!
நண்பர்கள் கூட்டம்
நாளை வரும்
நால்வரின் கைகளால்
கடைசி நாள் பயணம்!
என்னோடு என் கனவுகளையும்
எரித்துவிடுங்கள் இல்லையேன்றால் கதறியழும்
என் கனவுகளை காப்பாற்றுவததற்கு யாருமில்லை!
இன்று வரை மண்ணில் விளைந்ததை
நான் உண்டேன் நாளை விழைந்த மண் என்னை உட்கொள்ளும்!
தண்ணீரில் மலர்ந்த மலர்கள்
கண்ணீரில் நனைந்தபடி
என் இறுதி ஊர்வலத்தில்..!
நாளை இந்த சூரியன் வரும் நேரம்
நான் இந்த பூமியிலேப் புதைக்கப்பட்டிருப்பேன்
இதோ நால்வர்
என்னை புதைத்து விட்டு போனார்கள்
இந்தக் கருமத்திற்க்காகவா இத்தனை போராட்டங்கள்
இந்த உலகினில்!
எடுபடவில்லை, தூரத்தில்
கருங்குயிலின் கீதம் !
வரவேண்டியவர்கள் எல்லாம்
வந்தார்கள்
வந்தவர்கள் எல்லாம்
போனார்கள்
இங்கே
ஆறுதல் சொல்ல
யாருண்டு எனக்கு..
பத்து மாதம்
படுத்திருந்தக் கருவறை
எப்படி இருந்ததென்பதை அறியாதவனுக்கு
இறந்த பின்
கூடும் அறை
எப்படி இருந்தால் என்ன..?
தொப்புள் கொடியில்
தொடர்ந்த கண்ணீர் துளியின் ஈரம்
உயிர்க்கொடி உடையும் போதும்
அப்படியேக் காயாமல்!
என் இறப்பின்
நாட்கள் எண்ணப்படுவதால்
இன்று முதல் தூக்கத்திற்குத்
துக்கதினம் அனுசரிக்கப் படுகின்றன
விழிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன
ஆனால்
அழும் என் கண்களுக்கு மட்டும்
அணைக்கட்டுப் போட முடியவில்லை.
என்
இருவிழிகள் இரைக்கும் கண்ணீரை
எடைப்போட்டு பாருங்கள்
கடலின் அடர்த்தியை விடக்
கனமானதாக இருக்கும்!
இப்போதெல்லாம்
என் மூச்சிக்காற்றோடு
நாசித்துளை வழியாக
நரம்போடுகூட உறவாடி விட்டு தான்
வெளியே வருகிறது
ஏக்கமும்.. பயமும்...
பார்க்கும் திசையை
வெகுநேரம் வெறித்தப் பார்வைப்
பார்வைக்கின்றன கண்கள்.
உதிர்ந்த மலர்கள்
என் மீது விழும்போதெல்லாம்
சந்தோசப்பட்ட என் மனது
இப்போது
கண்ணீர் விடுகிறது
மலர்ந்த மலர்களுக்காக...!
வாழ்க்கைப் படம்
திரையிடப்பட்டு ஒளிப்பதிவு
செய்யப்படுகிறது
எங்கு
திரையிடப்படுமோ?
பூமி மிதித்தோடும்
பூதவுடல் இறுதியில்
பூமியால் மிதிக்கப்படுவதே
இயற்கையின் நியதி..!
.தாகம்...தண்ணீரால்
தீர்க்க முடியாதத் தாகம்
தாய்பாலின்
கடைசித் துளித் தீரப்போகிறது!
நண்பர்கள் கூட்டம்
நாளை வரும்
நால்வரின் கைகளால்
கடைசி நாள் பயணம்!
என்னோடு என் கனவுகளையும்
எரித்துவிடுங்கள் இல்லையேன்றால் கதறியழும்
என் கனவுகளை காப்பாற்றுவததற்கு யாருமில்லை!
இன்று வரை மண்ணில் விளைந்ததை
நான் உண்டேன் நாளை விழைந்த மண் என்னை உட்கொள்ளும்!
தண்ணீரில் மலர்ந்த மலர்கள்
கண்ணீரில் நனைந்தபடி
என் இறுதி ஊர்வலத்தில்..!
நாளை இந்த சூரியன் வரும் நேரம்
நான் இந்த பூமியிலேப் புதைக்கப்பட்டிருப்பேன்
இதோ நால்வர்
என்னை புதைத்து விட்டு போனார்கள்
இந்தக் கருமத்திற்க்காகவா இத்தனை போராட்டங்கள்
இந்த உலகினில்!
No comments:
Post a Comment