
நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்....
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்!!!
உனக்கான என் பிரியம்....
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்!!!
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை....
என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம்!!!
உன் பதிலுக்கான என் கேள்விகள் செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்!!!
உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும் நீ இல்லையென்ற வெறுமையை என்ன செய்வதென்று யோசிக்கிறேன்.
தனிமையில்............!!!
No comments:
Post a Comment