
வேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை கடவுளிடம் கொடுக்கிறேன்.
கசகசப்பில் அருவருப்படையும்- கடவுள்
இரவின் அடர்த்தியைக் குறைத்து.
சாரல் மழையோடு மெலிதாக காற்று வீசச் செய்கிறார்.
இருந்தும்.......
கோடையின் இரவில் உறங்க முடிவதில்லை
எழுத முடிவதில்லை
நினைக்க முடிவதில்லை.
எதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.
அதுவும்.. எனக்குள்ளே!!
No comments:
Post a Comment