
இமைப்பதை போலவே
உன்னை நினைக்கவும்
நான் எப்போதும் நினைத்ததில்லை
அது தானாகவே நிகழ்த்து விடுகிறது...
பயணங்களில்
ஜன்னலோர இருக்கைகள்
கிடைக்கும்போதெல்லாம்
நீ எனக்குள்ளே நீயாகவே பிறந்துவிடுகிறாய்...
தூக்கம் இல்லாமல் துடிக்கும்போது
தானாகவே துள்ளிகுதித்துக்கொண்டு ஓடிவருகிறது
உன்னுடைய பசுமையான நினைவுகள்
என்னை தூங்கவைபதற்க்கும் ஏங்கவைபதற்க்கும்..
No comments:
Post a Comment