
என்னை பற்றிய நினைவுகள்
துளியும் இல்லாமல்
உன்னை பற்றிய நினைவுகள்
சிறிதும் மங்காமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...
நனவில் நீ வருவாய் என
எதிர்பர்த்திருந்தும்
கனவிலாவது கண்ணில்படுவாய் என
காத்திருந்தும் தோற்றுபோகவே
உன்னை காணும் பொருட்டு
எழுந்திரிக்க எத்தனிக்கும்போதுதான்
தெரிந்தது என் கால்கள்
சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது..
No comments:
Post a Comment