Tuesday, 17 May 2011


என் நினைவுகள் உன் மடியில்
கண் உறங்கும்போது விழிகள்
தன்னிச்சையாக கண்ணீர் சிந்துவதை
உன்னால் தவிர்க்க முடியாது.

நீ எரித்த என்னுடைய
காதல் கடிதங்களின் சாம்பல்கூட
உன்னை சபித்து கொண்டுதான் இருக்கும்.

ஒன்றாகவே இருந்தாலும்
கண்கள் கலங்குவது
இமைகளுக்கு தெரிவதில்லை.

காதலில் தோற்ற போதுதான்
உன்னை அதிகமாக
நேசிக்க தொடங்கினேன்.

என் இதயத்தின் ஓசையில்
கலைந்துபோன ஒரு கருவின்
விசும்பல் கேட்கிறது.

No comments:

Post a Comment